Friday, April 15, 2016

வெயிலின்  தாக்கத்தால் நாடு முழுவதும் 130 பேர்  உயிரிழந்துளனர். கர்நாடக, ஓடிஷா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் நீர் nilaikaLum வறண்டுவிட்டன. வெள்ள பாதிப்பில் இருந்து மெல்ல மீண்டு வரும் சென்னை மக்களும் வெயிலின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். மழை மற்றும் புயலின் போது   மட்டுமே முன்னெச்சரிக்கையை  கொடுத்து வந்த வானிலை ஆய்வு மையம், வெயிலின் தீவிரத்தை உணர்ந்து   கோடை காலத்திலும் வானிலை அறிக்கையை கொடுக்க தொடங்கியிருக்கிறது .
வழக்கமாக ஏப்ரல் 3 வது வாரத்தில் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும் வெயிலின் தாக்கம் இந்த முறை மார்ச் மாதமே தொடங்கி விட்டது. மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. வெயிலின்  தீவிரத்தை நம்மால் குறைக்கி முடியாவிட்டாலும், ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வெயிலின் பாதிப்புகளில் இருந்து  நம்மை  தற்காத்து கொள்ள முடியும்.

  மதியம் 12 மணியில் இருந்து 3 மணி வரை வெளியில் செல்வதை முடிந்தவரை  தவிர்க்க வீண்டும்.
தாகமாக இல்லை என்றாலும் கூட ஒரு  மணி  நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் அருந்துங்கள். 
வீட்டின் ஜன்னல்களிலும் , கதவுகளிலும் மெல்லிய பருத்தி துணிகளாலான திரைகளை பயன்படுத்தவும்.
பணியின் காரணமாகவும், அவசரமாக வெளியில் செல்ல நீர்ந்தால் குடையும், குடிக்க தண்ணீரும் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
குழந்தைகளையும், செல்லப்பிராணிகளையும் தனியே அனுப்ப வேண்டாம்.
மது அருந்துவதையும், டீ , காப்பி போன்ற  பானங்களை தவிர்த்து விட்டு  முடிந்த வரை தர்பூஷ் ,மோர்  போன்றவற்றை அருந்த வேண்டும்

No comments:

Post a Comment